வசப்படுமா
உழைக்கும் கரங்கள் உறுதிகொள் நெஞ்சம்
பிழைப்பில் நேர்மை பிறர்நலம் பேணல்
நாடும் மொழியும் நல்லுயிர் கலத்தல்
தேடும் அறிவினில் முடிவிலா நாட்டமே
மனிதப் பிறப்பின் மாண்புறு இலக்கணம்
இனியொரு விதியும் இதன்மேல் இல்லை
குறுக்கு வழியில் கொள்ளை தேடுவோர்
உறுப்பிலாப் பிண்டம் உணர்விலா மரங்கள்
குருதியை உறிஞ்சிக் குடிக்கும் கூட்டம்
தெருவில் கழிவினைத் தின்பதை யொக்கும்
உழைப்பின் மலர்ச்சியே உலகிடைப் புதுமை
நிலைத்த புகழின் ஊற்றும் அதுவே
கனலிடைப் பட்ட இரும்புத் துண்டாய்
புனலிடை ஓடும் காகிதப் படகாய்
வாழ்வதை இன்பமாய் வழக்கமாய்க் கொண்டவர்
தாழ்வுறல் நீதியா தழைக்குமா அறங்கள்
பாடு படுபவன் உயர்ந்திட மகிழ்வோம்
நாடவன் கையில் வசப்பட எழுவோம்.
Friday, March 19, 2010
Subscribe to:
Posts (Atom)