Sunday, February 8, 2009


என்று விடுதலை ?

அயல்நாட் டவனின் ஆட்சியை மாற்றும்
அருஞ்செயல் ஒன்றே விடுதலை யாமோ
புயலாய் வீசும் மடமை இருளில்
புதைந்து போயினை, விடுதலை என்று?

பேசும் மொழியில் ஆற்றும் பணியில்
பிறமொழி கண்டாய் ‍அடிமையென் றானாய்
காசும் பொருளும் வாழ்வென் றாகிக்
கல்மனங் கொண்டாய், விடுலை என்று?

அண்டை வீட்டான் அழுது கிடப்பினும்
அளவைக் கூட்டித் திரையிசை கேட்பாய்
பண்பில் மரமே, தன்னலப் பேயே,
பள்ளம் வீழ்ந்தனை, விடுதலை என்று?

ஆணவம் ‍பேரவா அடுத்துக் கெடுத்தல்
அழிக்கும் பகைமை அறமிலா வாழ்க்கை
கோணல் அறிவு கூட்டம் மறுத்தல்
கொடுந்தீ மூழ்கினை விடுதலை என்று
?

No comments: